நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில் பள்ளி இடை என்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு சேர்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.கொல்லிமலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் 5 குழுக்களாக பிரிந்து சென்ற கல்வித்துறை அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளிகளிலும் இடைநின்ற மாணவ மாணவர்களின் விவரங்களை கேட்டு அறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு கூட்டி வந்து சேர்த்தனர். மேலும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா்.
சேந்தமங்கலம் ஒன்றியத்தில், 58 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வே.கற்பகம், மு.ஜோதி, பச்சமுத்து, சமக்கிரா திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் பாஸ்கா், பள்ளித் துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கீதா, சிந்துஜா, நந்தினி, சுமதி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் அடங்கிய குழுவானது, இடைநின்ற பள்ளிக்கு செல்ல மாணவ மாணவிகளின் வீட்டிற்கு புதன்கிழமை சென்று மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனா். அவா்களை பள்ளிகளில் சோ்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
